Friday, September 26, 2025

சுமதி வளவு (2025) - ஹாரர்

 


சுமதி வளவு

அப்டின்னு ஒரு மலையாளப் பேய்ப்படம். வளவுன்னு டைட்டில் இருக்கறதால, தமிழ்ல அப்டி ஒரு பதம் இருக்கு, இது அதில்ல. அவங்களுக்கு தமிழ்ல வளைவு (பெண்ட் – திருப்பம்)ங்கறத சரியா சொல்ல வரல. அதனால, சுமதி வளவுன்னே வச்சிட்டாங்க. உண்மையில இதுல பேசியிருக்கற தமிழ் டப்பிங் கூட அப்டித்தான் இருக்கு. தமிழ் பேச வரும்ங்கற ஆட்கள வச்சு டப் பண்ணிருக்காங்க. அது நீங்க படத்தப் பாக்கும் போது புரியும். சரி இன்னும் எனக்கு என்னென்ன இந்தப் படத்துல புரிஞ்சதுங்கறத பாக்கலாம் வாங்க.

கதைப்படி, இது தமிழ்நாடு பார்டர்ல உள்ள ஒரு கேரளா ஊர். அங்க ஒரு எஸ் பெண்டு இருக்கு. எஸ்ன்னா, சரியாவே அது எஸ் தான். அது ஆங்கிலேயர்கள் காலத்துல இருந்து ஒரு மித்தோட இருக்கற ஊர். அங்க ஒரு பேய் இப்பவும் இருக்கு. அந்தப் பேயோட பேருதான் சுமதி. அதனாலயே அந்த திருப்பத்துக்கு மட்டும் சுமதி வளவுன்னு பேரு. நைட்டு எட்டு மணிக்கு மேல அங்க உள்ள செக்போஸ்ட்டைக் கூட தெறக்க மாட்டாங்க. ஊருக்குள்ள போகனும்ன்னா அதுதான் ஒரே வழி. செக் போஸ்ட் தாண்டி இருக்கற சுமதி வளவைக் கடந்தே தான் போயாகனும்.

மீறிப் போனா…

அவ்ளோதான். நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குற காட்டு வழியில இருக்கற எஸ் பெண்ட் அது. மீறி ராத்திரி நேரங்கள்ல போனவங்களுக்கு நிச்சயம் எதாவது ஒரு சம்பவம் அல்லது திகில் அனுபவங்கள் நடந்தே தீரும். அதைத் தெளிவா படத்துல ரெஜிஸ்ட்டர் பண்ணிருக்காங்க. இது மட்டும்தான் கதையா? படத்துல கடைசி வரைக்கும் பயமுறுத்திட்டே தான் இருப்பாங்களா?ன்னு கேட்டா, இல்ல - இது போக ஊருக்குள்ள தனிப்பட்ட முறையில நிறைய கதை, காதல், காமம், போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள்னு நெறய இருக்கு.

ஹீரோ ஒரு பயந்தாங்கொள்ளி. தனியா பாத்ரூம் கூட போக பயப்படற ஆம்பள. அதை மொத ஹீரோ அறிமுகக் காட்சியிலயே நமக்கு சரியா புரியிற மாதிரி பதிவு பண்ணிடறாங்க. இதனால, ஊர்ல எல்லார்கிட்டயும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிட்டிருக்கற ஒரு சாதாரண ஆள். ஆனாலும், அவனுக்கு இதைப் பத்தியெல்லாம் கவலையில்ல. கவலைப்படறளவுக்கு பெரிய பிரச்சினை ஒன்னு இருக்கு. அது யுனிவர்சல் பிரச்சன. அவன் யாரை லவ் பண்ணாலும், அவங்களுக்கு சீக்கிரம் கல்யாணமாகிடும். அந்தக் கல்யாணத்துல பந்தி பரிமாறிகிட்டிருப்பான் சோகமா. இதுவே ஒரு கட்டத்துல நாம ஃபீல் பண்றளவுக்கு அந்தக் காட்சிகள அமைச்சிருக்காங்க.

ஹீரோயின் ஒரு ஸ்கூல் டீச்சர். ஜோ படத்துல ரியோவுக்கு ஜோடியா நடிச்ச மாளவிகா மனோஜ் தான் அந்த ஹீரோயின். ஹீரோ ரோமாஞ்சம் படத்துல நடிச்ச அர்ஜுன் அசோகன். ஒரு ஃபைட்ல வில்லன அடிக்கப் போறப்ப, அவன் குனிய, அந்த அறை ஹீரோயின் மேல விழுந்துடுது. அதை வச்சு செமயா லவ் பண்ண வச்சிருக்காங்க. சினிமால மட்டுந்தாண்டா, அடிச்சாக் கூட காதல் வருது. நாமெல்லாம், கண்ணே பொன்னேன்னு கொஞ்சினாக்கூட காதல் வர்றதில்ல. நம்ம டிசைன் அப்டி.

இதெல்லாம் போக, ஹீரோ மேல ஹீரோயினோட மொத்தக் குடும்பமும் ஒரு தீராத கோபத்துல இருக்கு. அதாவது, அவங்க வீட்டுப் பொண்ணு ஒருத்தங்க ஓடிப் போறதுக்கு ஹீரோதான் ஹெல்ப் பண்ணிருக்கான்னு. அதுல நெஜமா நடந்தது என்னன்னு படத்தோட கடைசி சீன் வரைக்கும் சஸ்பென்ஸ்லயே வச்சிருந்தது செம.

இது யூஸ்வல் பேய்ப்படம் இல்ல. பேய்ங்கறது இந்தப் படத்துல வெறும் மித் மட்டும் இல்ல. அதையும் தாண்டி, படத்துல அது ஒரு முக்கியமான கேரக்ட்டர். அதனாலதான், அதோட பேரை அந்த எஸ் பெண்டுக்குன்னு மட்டும் இல்லாம, படத்தோட டைட்டிலாவும் வச்சிருக்காங்க.

இதுபோக எனக்குப் படத்துல ஒரு ஒவ்வாமையும் இருக்கு. அதாவது, படம் பாக்கற ஆடியன்ஸான நமக்கு, செண்டிமெண்ட் ஃபீலாகனும்ங்கறதுக்காக, கொழந்தைங்களைக் கொல்லுறது, புள்ளத்தாச்சியக் கொல்லுறதுன்னு ஏன் இவ்ளோ டீப்பா எறங்கிப் போறாங்கன்னு புரியல. இதையெல்லாம் நார்மலைஸ் பண்ணாதிங்க ப்ளீஸ். இதைப் பாக்கற நமக்கு செண்டிமெண்ட் ஃபீலாகறதுக்கு பதிலா, டிஸ்ஸப்பாய்ண்ட்டாவும், அதிருப்தியாவும்தான் ஃபீலாகுது.

மொத்தத்துல இந்தப் படத்தை பகல்ல பார்த்தா அவ்வளவா எஃபெக்ட்டாகாது. முடிஞ்சவரைக்கும், பொழுது சாஞ்சதுக்கப்புறமா பாருங்க. ஹார்ரை ஃபீல் பண்ணுவீங்க.


No comments:

Post a Comment