Tuesday, September 23, 2025

இந்திரா (2025)

 


இந்திரா
அப்டின்னு ஒரு திரில்லர் படம். வசந்த் ரவி, மெஹ்ரீன் பிரசீதா, அனிகா சுரேந்திரன், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் இவங்கெல்லாம் நடிச்ச தமிழ்ப்படந்தான். சன் நெக்ஸ்ட்ல இருக்கு. எப்டி இருந்துச்சுன்னு பாக்கலாம் வாங்க. ஹெவிய்யா கடுப்புல எழுதறதால, ஹெவிய்யா ஸ்பாய்லர்ஸ் இருக்கும். அதனால, படத்தைப் பாத்து கடுப்பாகியே தீருவேன்னு நெனைக்கிறவங்க மேற்கொண்டு பதிவைத் தவிர்க்கவும்.
கதைப்படி ஹீரோ வசந்த் ரவி, சஸ்பெண்டாகி திரும்ப ஆர்டர் கிடைக்காம, தெனம் கமிசனர் ஆபிஸ்க்கு ட்ரிப் அடிச்சி, எதுவும் கெடைக்காம விரக்தியில வீட்டுக்கு ரிட்டர்னாவுற ஒரு காவல்துறை அதிகாரி. சரி அப்டி சஸ்பெண்டானதுக்கப்புறம் என்ன பண்ணிட்டிருக்காருன்னு பாத்தா, பாருக்குப் போயி சரக்கடிக்கிறாரு. அடுத்த சீன் கமிசனராபிஸ் ப்ளஸ் ஏமாத்தம், மறுபடியும் வீட்டுக்கு வந்து மொடக் மொடக்ன்னு குடிக்கிறாரு. அடுத்த சீன் கமிசனராபிஸ் ப்ளஸ் ஏமாத்தம், அப்டே டக்கீலா ஷாட்சா போட்டுத் தாக்கிட்டிருக்காரு. அடுத்த சீன் கமிசனராபிஸ் ப்ளஸ் ஏமாத்தம், பாட்டிலோட போட்டுக் கல்ப்பா குடிச்சுத் தாக்குறாரு. சரி அப்டி ஏன் சஸ்பெண்டானாருன்னு பாத்தா, குடிச்சிட்டு போலிஸ் ஜீப்ப எடுத்துட்டுப் போயி ஆக்சிடெண்ட் பண்ணதனால. ஙே!
அடுத்ததா சுனில். ஒரு தேட்ரியில பழைய சாக்கி சான் படம் பாத்துக்கிருக்காரு. பக்கத்து சீட்ல ஒருத்தன், ஒரு லேடிய கூட்டிட்டு வந்து இங்கயே வேணும்ங்கறான். அந்த லேடி வேணாம் எல்லாரும் இருக்காங்க ரூம் போட்டுக்கலாம்ங்கறா. இதையே மேற்படி பாரா மாதிரி ரிப்பீட்டடா பேசி டிஸ்கஸ் பண்ணிட்டிருந்ததுல கடுப்பானவரு, அந்த லேடி போனதுக்கப்புறமும், அவனும் பாத்ரூம் போனதுக்கப்புறமும், செவனேன்னு தான் இருக்காரு. ஆனா பாருங்க, அடுத்ததா அவர் கடுப்பாகிப் போயி அவனை பாத்ரூம்லயே போயி கொன்னுடறாரு. ஏண்டா கொன்னாருன்னு பாத்தா, அதை அடுத்த சில சீன்கள்ல அவரே சொல்றாரு, என்னை யாராவது கடுப்பேத்துனா கொன்னுடுவேன்ங்கறாரு. அப்டி ஏன் அவன் பேசாம போயிக் கூட, தேடிப் போயி கொன்னாருன்னு பாத்தா, பாத்ரூம் போனவன் அவன்ற ஃபோன மிஸ் பண்ணிட்டுப் போயிருப்பான். அது ரிங்கானதுல கடுப்பாயிப் போயி கொன்னிருப்பாரு. ஙே!
மேற்படி பாரா சுனில்தான் சைக்கோ கொலைகாரன்னு அடுத்தடுத்த சீன்ல குடிச்சுக் குடிச்சுக் கண்ணு அவிஞ்சு போன போலிஸ் வசந்த் ரவி கண்டுபுடிக்கிறாரு. என்னடா அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டிங்க? அப்ப அவ்ளோதானா, கத ஓவரான்னு பாத்தா, ஏற்கனவே நாம ஹீரோ மேலயும் சுனில் மேலயும் ஓரளவு கடுப்புலதான் இதுவரைக்கும் படத்தைப் பாத்துகிட்டிருந்திருப்போம். அது நமக்கு எப்டி இருக்கும்ன்னா, ”நாம கண்ட காட்சி எல்லாம் உண்மதானா”ங்கற மாதிரி நெஜமாவே நாம கடுப்புலதான் இருக்கமாங்கற,” சந்தேகத்தோட. அப்டியே போனா எப்டின்னு டைரக்டர் அதுக்கு மேல நமக்கு ஒரு டாஸ்க் வச்சிருக்காரு – “ஏன் சும்மா கன்ஃப்யூசன்ல போற? அத கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டுப் போ”ன்னு. ஙே!
ஹீரோயின் மெஹ்ரீன் ப்ரசீதா, முன்ன விட ரொம்ப லீனா ரொம்ப அழகாத்தான் இருக்காங்க. தெரிஞ்சோ தெரியாமயோ இந்தப் படத்துல நடிச்சு, நமக்கு அவங்க மேல வரவேண்டிய பரிதாபம் போயி, கடுப்புதான் மிஞ்சுது. மொத்தப் படத்துலயும் கடுப்பு இல்லாத நார்மல் ஃபீல்ங்கறது யார்மேலயும் இல்ல. அனிகா அண்ட் அனிகாவோட ஜோடி சுமேஸ்னு நெனைக்கிறேன் (’கள’ன்னு ஒரு மலையாளப் படத்துல வில்லனா நடிச்சிருப்பாப்ல) இவங்க ரெண்டு பேர் மேலயும் ஆரம்பத்துல ஒரு கடுப்பு வரும். ஆனா, அதுவே போகப் போக, மத்தவங்கள விட உங்கமேல அவ்ளோலாம் கடுப்பாகலன்னு தோணும்.
மேல மொத பாராவுல சொன்னதுதான் இங்கயும். அப்டி கடுப்பெல்லாம் ஆக மாட்டேன்னு இந்தப் படத்த பாத்தே தீருவேன்னா, நாந்தடுக்க முடியுமா?

No comments:

Post a Comment