சக்தித் திருமகன்
அப்டின்னு ஒரு ஆக்சன் திரில்லர் படம். மொதல்ல இந்தப் படத்தை பராசக்தின்னு டைட்டில் வச்சு, அதே டைட்டில சிவகார்த்திகேயனும் வச்சு ரெண்டு அறிவிப்பு வந்து, கடைசில விஜய் ஆண்டனி விட்டுக் கொடுத்து சக்தி திருமகன்னு வெளியாகிருக்கற இந்தப் படம் எப்டியிருக்குன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி, விஜய் ஆண்டனியோட பேரு கிட்டு. என்ன வேலை பாக்கறார்னா பாலிட்டிக்ஸ்க்குள்ளயே பாலிட்டிக்ஸ் பண்ணி அதுல நல்லது பண்ற ஒரு மீடியேட்டர். ஊர் வழக்கப்படி புரோக்கர். நாமளாச்சும் பரவால்ல. இவ்ளோ டீசண்டா அந்த வேலைக்குப் பேர் வச்சிருக்கோம். ஆனா, வில்லன் இந்த வேலைக்கு வச்சிருக்கற பேரு பிம்ப். இதுல அயர்னி என்னன்னா, அந்த வில்லனும் அதே வேலைதான் பாத்துக்கிருப்பாரு. ஆனா பாருங்க, அவனுக்கு, ஹீரோ கிட்டுவப் பாத்தாலே ஆசனவாயெல்லாம் எரியும். ஏன்னா, அவா பண்ணா அது எதிக்ஸ். அதுவே அடுத்தவா பண்ணா எரியத்தானே செய்யும்.
படம் ஆரம்பிச்சு, கொஞ்ச நேரம் வரைக்கும் வில்லன் ஹீரோ, ஹீரோவோட சைடு கிக், ஹீரோயின் அப்டி இப்டின்னு ஒரு மாதிரியா அறிமுகங்கள் முடிஞ்சப்புறம், அட போட வக்கிற மாதிரி சில காட்சியமைப்புக்கள். உண்மைல சில சீன்ஸ் எல்லாம் அடேங்கப்பான்னு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனா அது எல்லாம் ஒரு ஸ்டேஜ்ல, என்ன பிரச்சினை, எதனால இவ்ளோ காண்டுன்னு படம் பாக்கற நம்மளே கேக்கறளவுக்கும், “தாய்க்கெழவி நீளமா பேசாத மூச்சு வாங்கும்”னு சொல்ற மாதிரி நாட்டுல உள்ள பிரச்சினைகள எல்லாத்துக்கும் ஒரே படத்துல சொல்யூசன் சொல்ல ஆரம்பிச்சதும், நமக்கே லைட்டா நெளியிற ஃபீல்.
படத்தோட ஆரம்பத்துல இருந்து, உண்மையிலயே இது அருவி படம் எடுத்த டைரக்டரோட படம்தானான்னு வியக்க வச்ச மாதிரி நல்லாத்தான் போய்கிட்டிருந்தது. இது இடைவேளை வரைக்குமே தொடர்ந்துகிட்டிருந்தது. அதுக்கப்புறந்தான் டைரக்டர் இல்லேல்ல, அவ்ளோ ஆச்சரியப்பட வேண்டாம். நான் அருவி படத்தோட டைரக்டர்தான்னு சொல்ற மாதிரி அதிதி பாலன் கேரக்ட்டரையே பாவம் விஜய் ஆண்டனிய பண்ண வச்ச மாதிரி ப்ரூவ் பண்ணிருக்காரு. டியர் டைரக்ட்டர் சார். ஒரு நேரத்துல எங்களுக்கு ஒரு டாஸ்க் குடுங்க. நாட்டுல இருக்கற மொத்தப் பிரச்சினைக்கும் ஒரே படத்துல சொல்யூசன் குடுக்கறேன்னு அவ்ளோ பெரிய டாஸ்க்கெல்லாம் குடுக்காதிங்க. ஓவர்டோஸாகிருச்சு.
விஜய் ஆண்டனியெல்லாம் பாவம் சார். அவர் பேட்டிகள்ல எப்டி பேசறாரோ, அதே டோன்லதான் படத்துல நீங்க கொடுக்கற கேரக்ட்டர்கள் வழியாவும் பேசறாரு. அவர் வாய்ஸ சிட்டிசன் அஜித் மாடுலேசன்ல கடைசில பேச வச்சதெல்லாம் ஏத்துக்கவே முடியாத டாஸ்க். லைஃப்ல மொத மொறையா ஒரு படத்தப் பாத்து அஜீரணமாகி, ஜெலுசில் குடிக்கனும்னு நெனைக்கிறளவுக்கா கதையெழுதி படமா எடுப்பிங்க. எல்லாத்துக்கும் ஒரு மீட்டர் இருக்கு. அதுக்கு மேலயும் போக வேணாம். கீழயும் போக வேணாம். மீட்டர்லயே படம் எடுங்க.
படத்துல எல்லா சீன்களுக்கும் வர்ற விஜய் ஆண்டனியே பாவம்ன்னா, அந்த ஹீரோயின் நெலமையக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எவ்ளோ அழகா இருக்காங்கன்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள அடுத்தடுத்த பிரச்சினைகளுக்குள்ள தாவிட்டே இருக்கு படம். உங்களுக்குப் புரிஞ்சதா, படத்துல இருந்த பிரச்சினையே இதுதான். உங்களோட படத்துல சொல்யூசன் சொல்றேன்னு சொல்லிட்டு எடுத்த கதைய வச்சு, நீங்க பத்துக்கும் மேல படம் பண்ணிருக்கலாம். அவசரப்பட்டுட்டீங்களே குமாரு!
ஹீரோயினை விடவும் படத்துல ஹீரோ கூட அதிகப்படியான சீன்கள்ல வந்து ஸ்கோர் பண்றது, செல் முருகன் தான். உண்மையிலேயே இவங்க ரெண்டு பேர்த்தையும், வாகை சந்திர சேகரையும் வச்சுகிட்டு, நீங்க தெகட்டறளவுக்கெல்லாம் படம் எடுத்திருக்க வேணாம்.
படம் நல்லால்லேன்னு நான் சொல்லல. நல்லாருந்திருக்கலாம்னு தான் சொல்றேன்.

No comments:
Post a Comment