Saturday, October 25, 2025

மிராஜ் - ஒடஞ்ச கண்ணாடி


மிராஜ் 

அப்டின்னு ஒரு மிஸ்டரி திரில்லர். அய்யோ அவங்க அப்டித்தான் சொல்லுவாங்க. ஏன்னா பணம் போட்டு படம் எடுக்கறாங்கல்ல. ஆனா...

அட கண்ணு இது ஒரு வெங்காயங் கண்ணு. காரமா இருக்கும் கண்ணெல்லாம் எரியும். ஆனா உரிக்க உரிக்க ஒன்னுமே இருக்காது. அதான் வெங்காயம். அதான் இந்தப் படம். அப்டித்தான் இந்தப் படம் முழுக்க உரிக்கல, ஆனா நல்லா உருட்டிருக்காய்ங்க. 

நல்லாருக்கா நல்லால்லியான்னு கேட்டா... நல்லாருக்குன்னும் சொல்ல முடியாது. நல்லால்லன்னும் சொல்ல முடியாது. 

வாங்க அது எப்டின்னு பாக்கலாம்.


கதைப்படி மொதல்ல வேணாம். இந்தக் கதைய ஸ்பாய்லரில்லாம ஹிண்ட்டா ஸ்பாய்ல் பண்ண ட்ரை பண்றேன். கீழ்க்கொண்டு படிக்கவும்.

அதாவது, ஒருத்தன ஒருத்தி லவ் பண்றா. அந்த ஒருத்தன் ரயில் விபத்துல மரிச்சு. பின்னே இது மலையாள மூவி அல்லே. பின்னெ ஞான் எங்கன விமர்சிக்கும்?

அவன் மரிச்சல்லே அவன் நல்லவனில்ல. அவன் ஒரு பெரிய காவாலி. ஆகாவலி அல்ல. காவாலின்னா தனக்கு வேணுங்கறத சாதிக்க எந்த எல்லைக்கும் போறவன். அப்டித்தான் இப்ப அவன் பண்ண லவ்வும், அவன் சாவும். 

பின்னே போலிஸ் எண்ட்ரி. வில்லன் பேர்ல ஒருத்தன் எண்ட்ரி. அப்றம் போலிஸ் துரத்த... வில்லன் மிரட்ட... யார? அந்தக் காதலியத்தான். எல்லாமே ஒரு ஹார்ட் டிஸ்க்குக்காகத்தான். ஏன்? பில்லா படத்துல என்ன தேடுவாங்க? டயரி. அதுல என்ன இருக்கும்? வில்லன் யார் யார் கூட டீல் வச்சிருந்தான்னு. இப்ப இந்தப் படத்துல ஹார்ட் டிஸ்க்ல என்ன இருக்கி? ( ஆம் இத மலையாளம்ன்னு நம்புங்க பிளீஸ் ) சரி அதுல என்ன இருக்கி? அதே வில்லன் யார் யார் கூட கூட்டு நாட்டு வச்சிருக்கான்ங்கற டீட்டெய்லஸ்தான். சொன்னா புரிஞ்சிக்கோங்க புரோவ். இதெல்லாம் சேம் கதையில்ல காப்பி டீயெல்லாம் இல்ல. ஒன்லி பியூர் மில்க்கிங்  சம் ஓல்ட் ஸ்கிராப்ஸ் மெட்டீரியல்ஸ். பழசுதான. அத காப்பி பண்ணா யாரு கேக்கப் போறா? தவிர இதுல டயரி இல்ல, ஹார்டு டிஸ்க். புதுசா யோசிச்ச ஃபீல் குடுத்தமா வெய்ட்டாயி காட்னமா... எப்புடீ!

இப்ப அந்த ஹார்டு டிஸ்க்கத் தேடி வில்லன் சிலர அந்தக் காதலிகிட்ட அனுப்புறான். அப்ப போலீஸ்? அந்த வில்லன அரெஸ்ட் பண்ணிருந்தா பிரச்சினையே இல்லையே, அவன் அத திருடிட்டு சாக வேண்டியதில்ல. அவளும் அடிவாங்கி சாக வேண்டியதில்ல. ஆனா பாருங்க கதை மூவ் ஆகனும்ல...

ஏதாவது புரிஞ்சதா? புரியலன்னா படத்தப் பாருங்க. புடிச்சா என்னைத் திட்... ம்ஹும் அதுக்கு வாய்ப்பில்ல. பிடிக்கலன்னா - நானா சொன்னேன் நல்லாருக்கு பாருங்கன்னு?

இதுல வில்லன் வில்லன் தான். ஆனா அதில்ல ட்விஸ்ட். இதுக்கு மேல நான் சொல்லவே வேணாம். உங்களுக்கே எல்லாம் புரிஞ்சிருக்கும். ஆனா இதெல்லாம் ட்விஸ்ட்னு யாரோ டைரக்டர் மண்டையில இல்லனா அவரோட ஆழ்மனசுல புகுந்து நம்ப வச்சிருக்காங்க. திரிஷ்யம் மாதிரி. ஆம்மா இது திருஷ்யம் பட டைரக்டர் படந்தான். பின்ன நம்பும்படியா நாம ஷாக்காகற மாதிரி ட்விஸ்ட் வைக்க இவர் என்ன கே.வி. ஆனந்தா என்ன?

எல்லாமே சின்னப்புள்ளைத்தனமா இஷ்டக் கூந்தலுக்கு கதைய வளைச்சிட்டு ட்விஸ்ட்டு இதான் கிளைமேக்ஸ்ன்னு சொன்னா கடுப்பாகுமா ஆகாதா?

Saturday, October 18, 2025

WAR 2 - கலர் கலரா வாந்தி

வார் 2

அப்டின்னு ஒரு இந்தி டப்பிங் ஆக்சன் மசாலா படம். ஏன் மசாலான்னா, அஃப்கோர்ஸ் இது இந்திப்படந்தான் ரித்திக் ரோஸன் நடிச்சதுதான். ஆனா பாருங்க கூட நடிச்சிருக்கறது ஜூனியர் என்.டி.ஆர்ல. அப்றம் அதுல மசாலா வாட இல்லாம சந்தனமும் ஜவ்வாதுமா மணக்கும்? என்ன ஒன்னு கொஞ்சம் ஹைஃபையான எலைட் மசாலான்னு வேணும்ன்னா எடுத்துக்கலாம். வேணாம்ன்னா காரம் கம்மியா வார் மொத பார்ட்டையே இன்னொரு வாட்டி பாத்துக்கோங்க. என்ன இப்ப? நாம வார் 2 எப்டி இருந்துச்சுன்னு பாக்கலாமா - சரி வாங்க.

கதைப்படி கபீர் - அதாங்க ரித்திக் ரோஸன் ரா-வுக்குள்ளயே ஒரு விஜிலாண்டியா இருக்காரு. அவர கலி-ன்னு ஒரு மர்ம கும்பல் கடத்தி வச்சுகிட்டு அவரோட காட்ஃபாதர் மாதிரி தன்னை வளத்த தன்னோட ரா ஆபிசர் ஒருத்தர கொல்லச் சொல்றாங்க. கஷ்டப்பட்டு கண்ல தண்ணியெல்லாம் வரவச்சு சுட்டுத் தள்ளிடறாரு. அத ஃபுல் ஃபோகஸ்ல, டைட் குளோசப்புல கொஞ்சம் லாங்ல இருந்து லாங் ஷாட் எடுத்து அந்த வீடியோவ ராவுல பரப்பி விட்ருது கலி. அப்பத்தான் ரா-வுல இனிமே கபீருக்கு ஹெல்ப் கிடைக்காதுன்னு ஒரு நல்ல எண்ணத்துல. ரா-வுல விஜிலாண்டியா இருந்தவர, இந்தியாவுல உள்ள கிராமத்து போலிஸ் டேசன் கான்ஸ்டபிள் கூட கண்டவுடன் சுட்டுடுவாங்கன்ற மாதிரி மோஸ்ட் வாண்டட் கிரிமினலா ஆகிடறாரு கபீர் ரோஸன்.

இதுல அந்த செத்துப் போன ரா அதிகாரியோட பொண்ணு தான், கபீர் கா காதலி கியாரா அத்வானி. பேரு காவியா. ஆமாமா காவி கலர் பிகினி சீன் கூட ஒன்னு ட்ரெண்டாச்சே - இந்தப் படத்துல தான், இந்தப் படத்துலதான். ஆனா பாருங்க காவியாவுக்கு தன்னோட தந்தையக் கொன்னது கபீர் தான்னு அந்த வீடியோவ ஜூம் பண்ணிப் பாத்ததுல தெரிய வருது. இந்தப் படத்துல கியாராவுக்கு ஜூம் பண்ணிப் பாக்கறதுதான் பல சீன்கள்ல அவங்க பாத்துக்கிருக்க ரா அதிகாரி வேலை. 

கபீர புடிச்சே ஆகனும் பழிவாங்கியே ஆவணும்னு கையில துப்பாக்கியோட இத்தாலி தெருக்கள்ல எல்லாம் வெறி கொண்டு திரியிறாங்க. ஆமா, கதைப்படி எல்லாமே இந்தியால தான். ஆனா பெரிய பட்ஜெட் படம்ங்கறதால இத்தாலி துபாய்ன்னு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் வேற வேற நாடுகள் வழியா கார்ல, பைக்ல, போட்ல, கப்பல்ல, யாட்லன்னு கிராஸ் பண்ணிட்டிருப்பாங்க. இத அவங்க பெரிய பட்ஜெட் படம் அதனால அப்டித்தான்னு சொல்லுவாங்க அத நாம நம்பிட்டு அடுத்த ஃப்ரேம் அடுத்த நாடு ஆனா அது இந்தியால நடக்கற கதைன்னு இமாஜின் பண்ணிக்கனும்.

இவ்ளோ நேரம், எங்கடா ஜூ - என்.டி. ஆர்ன்னு ராவுல உள்ளவங்க எல்லாரும், ரா ஆபிஸ்க்குள்ள போயிப் பாத்தா, கபீரப் புடிக்க வந்த புது ரா ஆபிசரே அந்த ஜு - என்.டி.ஆர் தானாம்.

அப்றம் பல பன்ச்சு பறக்க, கண்ணு மொறைக்க, புருவந்துடிக்க, தோள்கள் தினவெடுக்க அடிக்கடி ஆக்சன் காட்டுறாரு. என்னதான் இந்த ஆக்சன் சீன் எல்லாம் மசாலா தெறிச்சாலும், ஒரு டுஸ்ட் வக்கிற மாதிரி செண்டியப் போட்டுத்தான் முடிப்பானுக. அதெல்லாம் ஒரு பிளாஸ்பேக் நோக்கி நகர, அது கபீரும் ரகுவும் - ரகு தாங்க ஜூனியர் என்.டி.ஆர் ஜூனியரா இருந்தப்பலேர்ந்தே வீட்டுல வச்ச பேரு. கபீரும் ரகுவும் அசால்ட்டா வாண்ட்டா வந்து தங்கிருக்கற ஜுவைனல் ஜெயில நோக்கி கதை நகருது. 

அங்க ஆரம்ப சீன்ல கபீரால கொல்லப் பட்ட காவியாவோட ரா அதிகாரி அப்பா தான் வந்து கபீர தத்தெடுத்துக்கறாரு ரா அதிகாரியா இண்டியா ஃபர்ஸ்ட்னு சொல்ல ஒரு வாரிசா. ஆமா ஆனா அதுல ரகுவுக்கு ஒரே வயித்தெரிச்சல். ஆனா அதுக்கு ரகுதாண்டா ஃபர்ஸ்ட்டுன்னு ஜூனியர் ஜூனியர் என்.டி.ஆருக்கு பன்ச் டயலாக் வச்சு, வாண்டடா வந்து தங்கிட்டிருக்கற ஜுவ்வைனல் ஜெயில்ல இருந்து அசால்ட்டா ஹை ஜம்ப் பண்ணி தப்பிச்சுப் போயி பெரிய ஜூனியர் என்.டி.ஆரா ராவுல விக்ரம்ங்கற பேர்ல வந்து, தன்னை ஜூனியர் வயசுல, ஜூவைனல்ல தான் மட்டும் ரா அதிகாரியால நல்ல பேரெடுத்த கபூவ கொல்றதுக்காக வந்து சேந்துருக்காரு. அதாவது, போலிஸ், சி.பி.ஐ, சி.பி.சி.ஐ.டி இவங்களாலயே டீல் பண்ண முடியாத வழக்குகளன்னு ஃபியூச்சர் டென்ஸ்ல போறத விட வரும் முன் காக்கற ரா இண்டலிஜெண்ட்ல எப்டி ஜுவைனல்ல அசால்ட்டா டீல் பண்ணாரோ அதே போல ராவுலயும் வந்து டியூட்டில ஜாயின் பண்ணி அங்க உள்ள பேப்பர் வெய்ட்ட ஸ்டைலா சுத்திட்டிருக்காரு. 

அப்றம் கபூவும் ரகுவும் ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கறாங்க, குத்திக்கிறாய்ங்க, அதுவும் லேட்டஸ்ட்டா வந்த சூப்பர்மேன் படத்துல வந்த அதே மாதிரி பனிக்குகையில, அப்றம் சுட்டுக்கறாங்க ஆனா சாவ மாட்றானுக. ஏண்டா படம் பாக்கறன்னு நம்மளத்தான் சாவடிக்கிறானுக. 

படத்துல பெரிய ட்விஸ்ட்ன்னெல்லாம் இவனுக காட்டுனது எல்லாம், அடுத்ததா வர்றா செண்டிக்கும், காவியாவோட காவி பிகினி சீனுக்குமான லீடுக தான்.

கிராபிக்ஸ் எல்லாம் பயங்கரம். ஒரு எடத்துல ஹெலிகாப்டர் மோதுற மாதிரி ஒரு ஆரம்பக்கட்ட ஃபைட் சீன் சேஸிங்ல, அந்த ஹெலிகாப்ட்டர தக்குனூண்டா காட்னப்பவே சிஜி பல்ல இளிச்சிருச்சு. அப்ப மத்ததெல்லாம் எப்டின்னு கால்குலேட் பண்ணிப் பாருங்க.

மொத்தத்துல பாட்டு நல்லாருக்கும்னு ஆர்க்யூ பண்றவங்க நல்ல ஹெட்செட்ல பாட்டக் கேளுங்க. காவியாவ பாக்கனும்னா ரெடிட்ல பார்த்துக்கோங்க. அவ்ளோதான் வேற ஒன்னும் உருப்படியில்ல இதுல. 

Sunday, October 5, 2025

காந்தாரா லெஜண்ட் சேப்ட்டர் 1

காந்தாரா லெஜண்ட் சேப்ட்டர் 1

அப்டின்னு ஒரு கடமுடா படம்.  சாமிப்படத்தையும் ஆக்சன் படத்தையும் மிக்ஸியில போட்டு அடிச்சு, அதுல வி.எஃப்.எக்ஸ் மசாலா தூவி கண்ல மொளகாப்பொடி தூவிருக்கற படம்தான் இது. இதைப் பாக்கனும்ன்னா ஒரு முக்கியமான தகுதி இருக்கனும். அதாவது தியேட்டருக்குள்ள படம் பாக்க வண்டிய வெளியவே பார்க் பண்ணி விட்டுட்டுப்  போற மாதிரி, மூளையையும் கழட்டி வச்சுட்டு டோக்கன் வாங்கிட்டுதான் போகனும். இதுல ஒரு சவுரியம் என்னன்னா, நமக்குத் தேவைன்னா வெளிய வரும்போது மறுபடியும் அத எடுத்து மாட்டிக்கலாம். வாங்க மறுபடியும் மூளைய எடுத்து மாட்டிகிட்டே இந்தப் படம் எப்டியிருக்குன்னு பாக்கலாம்.

கதைப்படி கெணரு மாதிரி ஒரு குழி. அதப்பத்தி ஒரு பையன் என்னான்னு கேக்க, அதுக்கு ஒரு கதைய அவுத்து வுட்டாம்பாருங்க அந்தாளு - அடங்கப்பா! அந்தப் பய கேள்வி கேட்ட எடந்தான் காந்தாராங்கற காடு. அதுக்கும் அந்தப் பக்கம் இன்னொரு டீப் ஃபாரஸ்ட். ஆனா பாருங்க, அதுக்குப் பேரு ஈஸ்வர பூந்தோட்டம். ஆமாங்க அது சிவன் இல்லயாம். ஈஸ்வரன் தானாம். ஒன்னு சிம்பு ஃபேனா இருக்கனும். அதுக்கு வாய்ப்பில்ல. பேன் இண்டியால ப்ரமோட் பண்ணனும்னு  ஈஸ்வரன்னு வச்சிருக்காங்களாம். 

அந்தக் கதயக்கூட ஒழுங்கா கோர்வையா சொல்லாம அந்தாளு, என்ன இருந்தாலும் பொடியந்தானன்னு, ஹல்க்கு பாடிக்கு மாட்டுத் தலையக் கொடுத்து, மூஞ்சிய மட்டும் கொரங்கு மாதிரி அடிச்சி விட்டாம் பாருங்க ஒரு கத.

அது யாரு, என்ன, ஏன், எப்டின்னு எந்த வெளக்கமும் இல்ல. சரி கதைப்படி ஒரு கல்லு வேணும்ல, டிசி - கிரிப்டோனைட், மார்வெல் - இன்பினிட்டி ஸ்டோன்ஸ் மாதிரி. இதுலயும் ஒரு கல்லு. அதுல ஒரு நாமத்த கிறுக்கி, இதான் பவர்புல் சாமிக் கல்லுன்னு கதையில செகண்ட் கியரப் போட்டு விடறான். அந்தக் கல்லு வந்தவுடனே அதக் கையில கெடச்சு எடுத்த புள்ளையோட பெத்தவங்க அவ ஊர்ல மத்தவங்கன்னு எல்லார்த்தையும் கொன்னுடறாங்க - இதெல்லாம் ஒரு அச்சசச்சோ ஃபீல்க்காக சேத்தீருப்பாம்போல.

இப்ப கதப்படி சாமிதான் ஹீரோன்னு அடிச்சு விட ஆரம்பிச்சவனுக்கு அந்த சாமிய எங்க இருந்தாவது கொண்டு வரனும்ல. அதனால வெளிய வெய்ட் பண்றவங்க எல்லாரும் அந்தக் குழியில போயி எட்டிப் பாத்தா, அதுல ஒரு கொழந்த. அந்தக் கொழந்தைய ஒரு பெத்த சைஸ் புலி சுத்தி சுத்தி வந்து மோந்துகிட்டிருக்கு. அந்தக் கொழந்த தான்  சாமி. அந்தக் கொழந்ததான் ஹீரோ எல்லாம்.

காட்டைப் புடிக்க ஒரு ராஜா வர்றாரு. அவர அந்தக் காட்டுல இருந்த அமானுஷ்யமான ஒரு எதோ ஒன்னு கொன்னுடுது. அந்த ராஜாவோட பையன் கண்ணு முன்னாலயே. அப்றம் அந்தப் பையன் வளந்து வயசாகினதுக்கப்புறந்தான் அந்தப் பையனுக்கு ஒரு கொழந்த பொறக்குது. படம் பாக்கப் போன நமக்கும், ஒரு விடிவு காலம் பொறக்குது. வடிவா ஒரு புள்ள - அதுதான் ருக்மணி.

அவ்ளோதான் இதுக்கு மேல கதையில ஒன்னுமில்ல. மொத்த ஏற்பாடும் ருக்குவ பாத்ததுக்கே சரியா போச்சு.

அதுக்கெல்லாம் அப்புறம் என்னாச்சு?

இருங்க இருங்க சொல்றேன். என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்க. ஆங் ஆமா அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் வில்லனா இல்ல காமெடியனான்னு ஒரு கொழப்பமிருக்கு. அப்பறம் நடுவுல பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்ஸ் படத்தோட ஸ்ட்ரீட் சேசிங் ரீல் ஓடிட்டிருந்தது. தியேட்டர்ல சேனல் மாத்திட்டிருப்பாங்களாருக்கும்னு நெனச்சுகிட்டிருந்தேன். அப்புறம் ஆள் யார்ன்னே தெரியாதளவுக்கு, ஒடம்பு மூஞ்சியெல்லாம் கருப்புக் கலர பூசிட்டு ஒரு குரூப்பு வந்துச்சு. அவனுக கூட பெருசா வில்லனுகளாட்ருக்குதுன்னு பாத்தா, தேவாங்க புடிச்சு, அதோட கண்ணீர்ல கரண்ட் எடுத்துக்கிருந்தானுக. ஓ ஹாரி பாட்டர் படமாடா - சேனல மாத்திருப்பானுகளாட்ருக்கு. எனக்கு அதெல்லாம் எங்கிங்க நாபகமிருக்கு. நமக்கு எப்படா ருக்குவக் காட்டுவானுகன்னு வெய்ட் பண்ணதுல அந்த ரிமோட்ட வச்சிருந்தது யாருன்னெல்லாம் பாத்துகிட்டிருக்க டயமில்லிங்.

அப்புறம் காந்தாரா படங்களா, எப்டியிருக்குன்னா? அத யேன் கேக்கறீங்க - ஒரே  கெரக்கத்துலயே ருக்குவப் பாத்துகிட்டிருந்தனுங்களா, ஹீரோவும் அதே கெரக்கத்துலயே ருக்குவப் பாத்துகிட்டிருந்தாருங்களா - திடீல்ன்னு ஒரு டுஸ்ட்டு. அந்தப் பேய் மூஞ்சிக்காரனுகதான் கொழந்தைக்கு பால் குடுத்துருக்கானுகளாமா, பால் கொடுத்தா அவங்க பவரெல்லாம் பால் குடிச்சுகிட்ட கொழந்தைக்கும் வந்துருமாமா - இதுதான் படத்துல நமக்கு சொன்ன நீதி. மத்தபடி நீங்க ஒன்னும் பீதியாக வேணாம். அந்தக் குழியப் பத்தி கேள்வி கேட்ட அந்தப் பையனத்தான் ரொம்ப நேரமா தேடிட்டிருக்கேன். கெடச்சதும் இனிமே இப்டியெல்லாம் கேப்பியாடான்னு நறுக்குன்னு மூனு வார்த்த கேட்டுப் போடோனும்ன்னிருக்கேன். வர்ட்டுங்ளா... நெறய சோலி கெடக்கு வாரேன். அப்றம் பாக்கலாங்.