தணல்
அப்டின்னு ஒரு ஆக்சன் திரில்லர் படம். ஒரு படம் பாத்துகிட்டிருக்கறப்ப அடுத்து என்னாகுமோங்கற ஒரு படபடப்பு ஃபீல ஆடியன்ஸுக்கு வர வச்சிட்டா அது நல்ல படம். அதுவே, அடுத்த சீனைப் பத்தி யோசிக்க விடாம, அய்யய்யோ இப்ப என்னாகும்னு ஒரு திக் திக் ஃபீல் வர வச்சா அது செம படம்ல்ல? இந்தத் தணல் நான் மேல சொன்ன ரெண்டாவது வகை. ஆனா, அதை வச்சி படம் பாத்த ஆடியன்ச சேட்டிஸ்ஃபை பண்ணிருக்காங்களான்னு பாக்கலாம் வாங்க.
காலேஜ் பசங்க மாதிரி உள்ள சிலரோட போலிஸ் சூட் அவுட் நடக்குது. அதுல அந்தப் பசங்க எல்லார்த்தையும் போலிஸ் போட்டுத் தள்ளிடுது. அதுல மெயினா இருக்கறவரு நம்ம மெட்டி ஒலி ‘போஸ்’ வெங்கட். அடுத்து இன்னொரு சீன்ல அவர் நைட்டு ரோந்து போயிட்டிருக்கறப்ப, மங்காத்தா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரால நடிச்ச அஸ்வின் காக்குமானி (இத்தனை படம் நடிச்சும் இவர இன்னும் நாம அறிமுகப்படுத்த வேண்டியிருக்கு பாருங்க) சிலரோட வந்து அட்டாக் பண்ணி ஆக்சிடண்ட் மாதிரி செட்டப் பண்ணி அதுல இருந்த ஆறு பேர்த்தையும் கொன்னுடறாங்க.
அதர்வா, ஃபைனலி பரத், சாரான்னு மொத்தம் நாலு வெட்டிப்பசங்க. எந்த நோக்கமும் இல்லாம தண்டச்சோறா கிரிக்கெட் வெளயாடிக்கிட்டும், எதித்த வீட்டு லாவண்யா திரிபாதிய லவ் பண்ண அதர்வாவுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டும் திரிஞ்சுகிட்டிருக்காங்க. ஒரு கட்டத்துல தன்னோட அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லன்னு வேலைக்குப் போக நினைச்சு, அந்த நாலுல மூனு பேர் போலிஸ் கான்ஸ்டபிளா ட்யூட்டில ஜாயின் பண்ண ஆர்டர் காப்பிய வாங்கறதுக்கு ஒரு ஸ்டேசனுக்கு வர்றாங்க. அங்க இன்னும் மூனு பேர், நம்ம நாடோடிகள், பிக்பாஸ் சீசன் 1ல எகிறிக் குதிச்சு தப்பிச்சுப் போன பரணியும் அதுல ஒருத்தர். இந்த ஆறு பேர்த்தையும் ஆர்டர் காப்பிய கொடுக்காமயே அன்னிக்கி நைட்டு அந்த ஏரியாவுல ரோந்து போகச் சொல்றாங்க.
மேல நான் ரெண்டாவது பாரால ஆறு பேரைக் கொன்னாங்கன்னு சொன்னேன்லயா, அந்த ஆறு பேருக்கு பதிலாதான் இந்த மூனாவது பாரால சொன்ன ஆறு பேறும் டியூட்டில ஜாயின் பண்ண வந்திருக்காங்க. அப்டி இவங்க ஆறு பேரும் நைட்டு ரோந்து போயிட்டிருந்தப்ப, ஒருத்தனோட நடவடிக்கையில சந்தேகப்பட்டு அவனைத் தொரத்த அவன் ஒரு ஸ்லம்முக்குள்ள போயி ஒளிஞ்சிக்கறான். இவங்களும் அவனை ஃபாலோ பண்ணிப் போயி அங்க தேடினா, அந்த எடமே ஒரு அமானுஷ்ய மர்மமா இருக்கு. அந்த ஸ்லம்ல இருந்த வீடுகள்ல யாருமே இல்ல. சட்டப்படி வழக்கு நடந்துகிட்டிருக்கற ஒரு ஏரியா. ஆனா அங்க அஸ்வின் கண்ல படவும், அவரை போலிஸ் தோரணையில பரணி நெருங்கவும், அங்க ஒரு திடீர் திருப்பம். அங்க இருந்து தான் நான் மொத பாராவுல சொன்ன மாதிரி இப்ப என்ன நடக்குமோங்கற படபடப்பு ஃபீல் தொத்திக்கிது. நிற்க.
இவ்ளோ செமயா, டைட்டா, கிரிப்பா கதை எழுதிருக்கிங்க வாழ்த்துக்கள் சொல்லலாம்னு பாத்தா, எதோ ஒன்னு ஹெவிய்யா என்னைத் தடுக்குது. அது என்னான்னு நல்லா யோசிச்சுப் பாத்தா, கதைப்படி அஸ்வின் வில்லன். அதர்வா ஹீரோ. ஆனா உண்மையில அஸ்வின் தான் ஹீரோவா போர்ட்ரே பண்ணப்பட்டிருக்கனும். அதர்வாவ உண்மையிலேயே வில்லனா போர்ட்ரே செஞ்சிக்கனும். கதைப்படி அதுதான் முறை. இது அப்டியே எந்திரன் 2.0ல வந்த அதே பிரச்சினை இந்தப் படத்துலயும் பொருந்தும்.
மேல சொன்ன பிரச்சினை இல்லாம, இன்னும் சில காரணங்கள் உண்டு. அஸ்வின் ஒரு சோல்ஜர், விவசாயி, சுரங்கத் தொழிலாளின்னு அவரோட கதாபாத்திரம் பக்காவா ஸ்கெட்ச் பண்ணி - வில்லன். அதுவே, அதர்வா, வெட்டி, தண்டச்சோறு, அம்மா அப்பா செல்லம், திடீர் கான்ஸ்டபிள் - ஆனா ஹீரோ.
இதுல ரெண்டு பேர்த்தோட முன்கதையும் தெளிவா ஆடியன்ஸுக்குக் காட்டப்படுது. அதுல அதர்வா, அந்தப் புள்ளைய லவ் பண்ணா என்ன பண்ணலேன்னா நமக்கென்னன்னும், ’இது யார்னு கண்டுபுடிங்க பாக்கலாம்’ன்னு எதாவது சில ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டாயமா வர்ற பெரும்பாலான கமெண்டுகளான, ‘ஆமா நாட்டுக்கு ரொம்ப முக்கியம்’ங்கற மாதிரியும் தான் நமக்குத் தோணும். அதுவே அஸ்வினோட பின்கதையை காட்டுறப்ப நமக்கே ஒரு கோபம் வரும். அந்தளவு ஈஸியா நம்மால கனெக்ட் பண்ணிக்கவும் முடியிற, நாம தெளிவா தெரிஞ்சிக்க வேண்டிய விசயம் அது.
ஆனா அறிமுக இயக்குனர்னு நினைக்கிறேன். கேரக்ட்டர் ஸ்கெட்ச் நல்லாவே பண்ண வருது இவருக்கு. அதை எந்தக் கேரக்ட்டருக்கு என்ன போர்ட்ரேயல் கொடுக்கனும்ங்கற வித்தியாசம் புரியல பாவம். அதெல்லாம் என்னென்னன்னு நீங்களும் படத்தைப் பாத்துட்டு ஒரு முடிவுக்கு வாங்க.

No comments:
Post a Comment