Tuesday, September 23, 2025

Blackmail (2025)

 


Blackmail
அப்டின்னு ஒரு கிரைம் திரில்லர் படம். கோயம்பத்தூர்ல நடக்கற கதைன்னு சொல்லிட்டு, கோயம்பத்தூர் வட்டார வழக்கே துளி கூட இல்லாம வெளி வந்திருக்கற படம். ஒருசில எடங்களத் தவிர வேற எந்த லோக்கேசனையும் கோயம்பத்தூர்ன்னே சொல்லிக்கக் கூட முடியாத ஒரு படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.
பிஸ்னஸ்மேனான ஸ்ரீகாந்த், மற்றும் அவரது மனைவி பிந்து மாதவியோட மகளான குட்டிப் பொண்ணு அனுவோட கார்ல வந்துட்டிருக்கறப்ப ஒரு சின்ன விபத்து. அனு அதுல மிஸ்ஸிங். ரேன்சம் காலெல்லாம் எதுவும் வரல. சோ இது கிட்னாப் இல்ல. அப்புறம் என்னாச்சு? படம் முடியிற வரைக்கும் அந்தப் பொண்ணத் தேடிட்டே இருக்காங்க.
இதுக்கு நடுவுல மிஸ்ஸிங்கான அனு, கிட்னாப் செய்யப்படுது. அச்சச்சோ அப்புறம்? கிட்னாப் செய்யப்பட்ட அனு கடத்தப்படுது. அப்புறம்? கடத்தப்பட்ட அனு கிட்னாப் ஆகுது. அய்யய்யே அப்புறம்? அப்புறம் கடைசி வரைக்கும் இதே அய்யய்யே தான். ஆக இதுல ஒரு கிட்னா நாய் இல்ல. ஏகப்பட்ட கிட்னா நாய்கள்.
இதுக்கும் நடுவுல பிந்து மாதவியோட முன்னாள் காதலால, அப்ப எடுக்கப்பட்ட வீடியோஸ் ப்ளஸ் இமேஜஸை வச்சுக்கிட்டு அவளோட முன்னாள் காதலனோட பிளாக் மெய்ல். அப்புறம் தான் டெலிவரி செய்யிறது கோக்கெயின்னே தெரியாம அதை டெலிவரி வேனோட தொலச்சிட்டு அதுக்கு பணயமா, தன்னோட கற்பமான காதலிய கிட்னாப் பண்ணி வச்சுகிட்ட முதலாளி முத்துக்குமாருக்கு, அந்த சரக்கோ அல்லது அதுக்கு ஈடா அம்பது லட்சம் பணமோ கொடுக்கணும்னு மிரட்டப்பட்டு அலையிற ஹீரோ ஜீ.வி.பிரகாஷ்குமார்ன்னு கதை போகுது வகை தொகையில்லாம.
டைரக்ட்டர் ஜீ, எதாச்சும் ஒன்னுல கான்சென்ட்ரேட் பண்ணி படம் எடுக்கலாம்லன்னு கேக்கறளவுக்கெல்லாம் இல்ல. இதையெல்லாம் கலந்தடிச்சு எல்லாம் ஒரே புள்ளியில பயணிக்கிற மாதிரி தெளிவாத்தான் எடுத்திருக்காரு.
மேல ஏகப்பட்ட கிட்னா நாய்கள்னு சொன்னேன்லயா, அப்டி யாரு ஃபோன் பண்ணி அனு எங்ககிட்டதான் இருக்குன்னு சொன்னாலும், ஸ்ரீகாந்த் அவங்களுக்கு அம்பது லட்சம், ஒரு கோடின்னு கொடுத்துட்டு, பதிலுக்கு அனு மட்டும் கிடைக்காம நல்லா நடிச்சிருக்கீங்க ஸ்ரீகாந்த். இவர் நடிச்சிருக்கறதால சந்திரிகா ரவியும் ஒரு குத்தாட்டத்துல போனஸா வந்து ஆடிட்டுப் போறாங்க. அவ்ளோ நல்லால்லாம் இல்ல. இன்ஃபாக்ட், சீரியஸ் ப்ளஸ் நல்லா விறுவிறுப்பா போய்ட்டிருந்த இந்தப் படத்துக்கு அது ஒரு ஸ்பீடு பிரேக்கர்தான். தயவு செய்து எடிட்டர்கிட்ட சொல்லி, அதையெல்லாம் தாட்சண்யம் பாக்காம எடிட் பண்ணி, டெலீட் பண்ணி ஒரு ஃபைல் ரெண்டர் பண்ணி அத ரிலீஸ் பண்ணுங்க டைரக்ட்டர். தேவையில்லாத அந்த ஆணியப் புடிங்கீட்டு.
அப்புறம் இந்தப்படத்துல எதுக்கு இவர் குறுக்கா மறுக்கா ஓடிக்கிருக்கார்னு கேக்க வச்ச ஒருத்தர் – ரமேஷ் திலக். இது சொல்லிக்கிற மாதிரி கேரக்ட்டரும் கெடயாது. அவரே சொல்லிக்கிட்ட மாதிரி, கதைக்கு அவ்ளவா முக்கியத்துவமுள்ள கேரக்ட்டரும் கிடையாது. பின்ன எதுக்கு நடிச்சாருன்னு தான் புரியல. இத்தனைக்கும் ரொம்ப சாதாரணமான சப்போர்ட்டிங் ரோல். இவரே தான் பல பேட்டிகள்லயும் சொல்லிருந்தாரு, கதைல அவரோட முக்கியத்துவத்தைப் பொறுத்து, அது ஒரு சீனா இருந்தாலும், யோசிக்காம, தயங்காம நடிப்பேன்னு. ஆனா இதைப் பாத்தா, அவர் பேட்டிகள்ல சொன்னத, அவரே யோசிக்காம ஒத்துக்கிட்டு நடிச்ச மாதிரிதான் தோனுது. கூடவே ரெடின் கிங்ஸ்லி – சிரிப்பு வரல. ஆனா கதைக்கு அப்டி ஒரு கேரக்ட்டர் தேவைதான் போல. அதனால ஓக்கே. அக்சப்ட்டபிள்.
படம் உண்மையிலயே நல்லாத்தான் இருக்கு. காலத்துக்கும் நெலச்சு நிக்குமான்னு சொல்லத் தெரியல. அது கொஞ்சம் கொழப்பம் தான். அதனால கிரைம் திரில்லர் விரும்பிகள் ட்ரை பண்ணலாம். படம் விறுவிறுப்பாத்தான் இருக்கு.

No comments:

Post a Comment