Goodnight Mommy (2014)
ஜெர்மன்
Horror / Thriller
இலியாஸ் மற்றும் லூக்காஸ் இருவரும் ரெட்டை சகோதரர்கள். தன் தாயுடன் அவர்களது பண்ணை வீட்டில் வசிக்கின்றனர். அவர்களது தாயார் முகத்தில் ப்ளாஸ்ட்டிக் சர்ஜரி செய்து அந்த கட்டுகளோடு இருக்கிறாள்.
அந்தக் கட்டுகளுக்குள் இருப்பது தங்களது தாயாரின் முகமல்ல என்பது அவர்களது சந்தேகம். அந்த சந்தேகம் வலுப் பெறுவது போல அவள் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகப்படியான கடுமையாக நடந்து கொள்கிறாள். நடுக் கூடத்தில் மீன் தொட்டியில் மீன்களுக்கு பதிலாக கரப்பான் பூச்சி வளர்க்கிறார்கள் சிறுவர்கள். அதுவும் கொச கொசவென. வெளியே காட்டிற்குள் எந்த சிறிய உயிரினங்களைக் கண்டாலும் வீட்டிற்குள் அடைத்து வளர்க்க நினைப்பதை கண்டிக்கிறாள் அவர்களது தாய்.
அதனால் அவள் மீது காண்டாகும் லூக்காஸ், அவள் தூக்கத்தில் இருக்கும் போது கரப்பான் பூச்சியில் ஒன்றை அவளது வாய்க்குள் திணிப்பது, பின்பு அவளது வயிற்றைக் கிழித்து அதற்குள் இருக்கும் கரப்பான்பூச்சிகளை வெளியேற்றுவது என தண்டனை தரப் போவதாக கற்பனை செய்து பார்க்கிறான்.
சில நாட்களில், கட்டுகளை களைந்து பளபளப்பான தனது முகத்துடன் தனது மகன்களிடம் இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டு நிற்கிறாள். ஆனால், அவர்களோ இவள் தமது தாயாரே அல்ல என, அவளது பழைய போட்டோக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தங்களது சந்தேகத்தை ஊர்ஜிதமாக்கிக் கொள்கின்றனர்.
அடுத்த நாள் காலையில் கண் விழித்தவளால் தனது கை கால்களை அசைக்க முடியவில்லை. கட்டிப் போடப் பட்டிருக்கின்றது என்பதை உணர்கிறாள். அதுவும் தனது படுக்கையிலேயே. சிறுவர்களின் சந்தேகம் தான் காரணம். அவள் தங்களது தாயல்ல என்றும் அவளை மிரட்டி அவளை இவள் எங்கே மறைத்து வைக்கிறாள் என்றும் மிரட்ட ஆரம்பிக்கின்றனர்.
இது அனைத்துமே ich seh ich seh (2014) என்ற ஜெர்மானிய திரைப்படத்தின் முதல் அரை மணி நேரக் கதை. ஆங்கிலத்தில் Goodnight Mommy என்கிற சப்டைட்டிலுடன்.
அதற்கு மேல் படத்தில் நடந்தவை அத்தனையுமே விபரீதங்களே... நிச்சயமாக குழந்தைகளுடன் பார்ப்பதைத் தவிர்க்கவும். அது பல (பலான அல்ல) துஷ்ட சம்பவங்களுக்கு வழி வகுக்கும். ஆனால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

No comments:
Post a Comment