Saturday, June 27, 2026

மூன்றாம் கண் - மர்டர் மிஸ்டரி


மூன்றாம் கண்

அப்டின்னு ஒரு தமிழ் மர்டர் மிஸ்டரி. நடிகர்கள்னு பாத்தா, ஜான் விஜய், கலையரசன், விதார்த், கே.பி.வொய்.சரத், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி, சுந்தரா டிராவல்ஸ் ராதா. உண்மயில இது ஒரு ஹூடன்னிட் படம். ஆனா கொஞ்சம் வித்தியாசமானது. படத்துல அந்த ஹூடன்னிட்டை மட்டும் ஆடியன்ஸே படத்தைப் பார்த்து, யாரந்தக் கொலையாளின்னு முடிவு பண்ணிக்கனும்னு முடிவ அன்சால்வ்டா விட்ருப்பாங்க. வாங்க அப்டி ஒரு அன்சல்வ்ட பார்த்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.


கதைப்படி ஒரு ஃபேக்டரி. அதுல ஒரு கொடூர சாடிஸ்ட் ஜெனரல் மேனேஜர். பேரு சதாசிவம். அவர் தனக்கு கீழ மேலன்னு யாரையும் விட்டு வைக்காம எல்லார்த்துகிட்டயும் கித்தாப்பாவும் எடுத்தெறிஞ்சும் பேசுவாரு. கீழ வேலை செய்யிறவங்களத்தான் மெரட்டறாருன்னு பார்த்தா, மேல உள்ள மேனேஜிங் டைரக்ட்டர் கிட்டயும் அப்டித்தான் பேசுவாரு. அதாவது அவர் எதாவது சொன்னா, ஜி.எம் சதாசிவம். இதெல்லாம் நான் பாத்துக்கறேன். நான் உங்கப்பனையே பாத்தவண்டா, போங்க தம்பி போய் உங்க கேபின்ல ஏசியில உக்காந்து எதையாவது அமுத்திட்டு கெடங்கன்னு சொல்லுவாரு. அதுவும் லேபர்ஸ் முன்னாடி. இது ஒருவகையில லாஜிக் பொத்தலா தெரிஞ்சது. அப்புறம் பொண்ணுங்க யாராவது இண்டர்வியூக்கு வந்தா அவங்க வீட்டுக்கே போய் உப்புமா டேக் அவே கேட்டு வாங்கிட்டு போவாரு. சேடிஸ்ட் அண்ட் பர்வர்ட்.

அடுத்ததா நாலு அத்தியாயங்கள். அதாவது இவரைக் கொல்ல முகாந்திரம் உள்ள நாலு கதாபாத்திரங்கள் அவரை ஏன் கொல்லனும்னு காட்டப்படுற நாலு எபிசோட்ஸ். அதுல என்னை ரொம்பவே பாதிச்சது முதல் எபிசோடான திலீபனோட எபிசோட். அவனுக்கு ஒரு பிரச்சினை இருக்கும். சவுண்ட் அலர்ஜி. இதால தான் நான் ரொம்ப பாதிக்கப்பட்டு வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். ஆனா அதை ஒரு எக்ஸ்ட்ரீம் லெவல்ல மிகைப்படுத்திக் காட்டிருப்பாங்க இந்த எபிசோட்ல. ஆபிஸ்ல சத்தமா மொபைல்ல பாட்டைப் போட்டு அலற வுட்டுகிட்டிருப்பாங்க. அதுவும் ஜெனரல் மேனேஜர். கேக்குறவன் கேனையனா இருந்தா... அந்த சீனை சதாசிவம் சவுண்டா பேசுறவர்ன்னு கூட வச்சிருந்திருக்கலாம். ஏன்னா அந்த மாதிரி பலரைப் பார்த்திருக்கேன். ஊருக்கே கேக்கற மாதிரி பேசுற சுபாவம் பலருக்கும் இருக்கறது உண்மை. ஆனா இதுல ஜி.எம் தன்னோட ஃபோன்ல சவுண்டா பாட்டைப் போட்டுகிட்டு வேற ஒரு ஆள்கூட ஃபோன்ல பேசிகிட்டிருந்ததா அந்த சீனை வச்சது இன்னொரு லாஜிக் பொத்தல். இதெல்லாம் அகைன்ஸ்ட் கம்பெனி ரூல். ஆனா பாருங்க இந்த ஃபேக்டரி ஆபிஸ்ல மட்டும் சகஜமா சவுண்டா பாட்டுக் கேட்டுகிட்டிருக்காரு சதாசிவம். இதுல இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் சண்டை வேற.

அடுத்து இன்னொரு எபிசோட். அது பிரகாஷ் அத்தியாயம். பிரகாஷுக்கும் ஒரு பிரச்சினை. அது சைக்கோத்தனமானது. உண்மையில ஹீரோயிசமானது. யாராவது அவர் முன்னாடி பொண்ணுங்கள அடிச்சாலோ துன்புறுத்தினாலோ அவங்கள அடிச்சுக் கொல்லனும்னு வெறியாகிடுவாரு. இதுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கற டாக்டரையே தன்னோட ஸ்டெனோவை காஃபி கொட்னதுக்காக இவர் முன்னாடி அடிக்க, அவரை இவர் அடிக்க அந்த டாக்டர் ஃபோட்டோல தொங்கிருவாரு மாலையோட. இதே மாதிரி தன்னோட கம்பெனியில வேலை பாக்குற பொண்ணை கை நீட்டிட்டாருன்னு சதாசிவத்தை அடிக்கப் போனவருதான். உண்மைல இதெல்லாம் ஒரு தலைவனுக்கான நல்ல தகுதியே. அப்டியே அந்தக் கேரக்ட்டரை டெவலப் பண்ணி ஒரு அந்நியன் மாதிரியான ஒரு செம படத்தை எடுக்கலாம்.

அடுத்து ஹரிணி எபிசோட். இண்டர்வியூக்கு வந்த பொண்ணுகிட்ட வீடு வரைக்கும் போய் அடாவடி பண்றாரு சதாசிவம். அதுல ஹரிணியோட அம்மா சதாசிவத்தோட எக்ஸ் லவ்வர். பாஸ்ட்ல சதாசிவத்துக்கு ஒன் சைட் லவ் போல. இப்ப கணவனை இழந்துட்டு பொண்ணை வளக்க கஷ்டப்படற அம்மா. அந்தம்மாகிட்டத்தான் நான் ஒன்னு கேக்கனும். யேம்மா, அதான் அவன் வீட்டுக்குள்ள உன் அனுமதியே இல்லாம உள்ள நொழஞ்சு உன்கிட்ட ரொம்ப இண்டீசண்டா பிஹேவ் பண்ணுவான் அப்புறம் பண்ணிட்டான்னு தெரியிதில்ல. ஏன் கதவைத் தெறந்து வெளிய போய் கத்த மாட்டியா? அவன் வந்து உன் கன்னத்துல மூக்கை வச்சு உறிஞ்சி மோப்பம் புடிக்கிற வரைக்கும் ஹய்யய்யோ நா இப்ப என்ன பண்றதுன்னு கைய பெசஞ்சுகிட்டு நிப்பியா? அப்டின்னு உங்களுக்கும் கேக்கத் தோனும் படம் பாக்குறப்ப. இது இன்னொரு லாஜிக் பொத்தல்.

அப்புறம் சண்முகம் எபிசோட். இவனுக்கும் ஒரு பிரச்சினை. அதாவது சண்முகம் பேச மாட்டான். ஊமையெல்லாம் இல்லங்க. அவன் ஒரு இன்ட்ராவர்ட். ஆனா அவன்கிட்ட அவனோட மனசாட்சி எப்பவுமே கூடவே இருந்து ரன்னிங் கமெண்டரி குடுத்துகிட்டிருக்கும். அதுவும் அவனோட நெய்பர் ஒருத்தி, அவளோட படுக்கைல இவனை வீழ்த்தி தடவிகிட்டிருக்கறப்பவும். பாக்கற நமக்குத்தான் திரீசம் போல ஃபீலாகும். ஆனா அந்தப் பொண்ணிக்குத்தான் இவன் மனசாட்சி கண்ணுக்குத் தெரியாதே. இதுல சதாசிவத்தை விட பெரிய பர்வர்ட் சண்முகந்தான். சரிங்க ஸ்பாய்லர்தான். வேண்டாம்ன்னா அப்டியே ஸ்வைப் பண்ணிட்டுப் போயிடுங்க. சதாசிவத்தைக் கொன்னது சண்முகந்தான். மத்த மூனு பேரும் தான்தான் சதாசிவத்தைக் கொன்னோம்னு நினைக்கிறது கூட நியாயந்தான். ஏன்னா அவங்களுக்கெல்லாம் ஒரு வலுவான காரணமிருக்கு சதாசிவத்தைக் கொல்ல. ஆனா சண்முகத்துக்கு? எது பொண்ணு குடுக்கலன்னா. யேங்க இதெல்லாம் ஒரு ரீசனா? இதுதான் ரீசன்னா, இது கன்வின்சிங் இல்ல. வேற ரீசன் இருக்குன்னா உள்ளதுலயே அதுதான் மிகப்பெரிய லாஜிக் பொத்தல் இந்தப் படத்துல. ஏன்னா அப்டி ஒரு காரணமும் இல்லாம ஒருத்தன் இன்னொருத்தனைக் கொல்லுவானா?

சரிங்க. அதெல்லாம் எப்டியோ போகட்டும். ஆனா இந்தப் படத்துல அவ்ளோ சிறப்பா நடிச்சிருக்கறது சதாசிவமா நடிச்சிருக்கற ஜான் விஜய் மட்டும்தான். ஏன்னா, இவ்ளோ தூரம் மத்த மூனு பேரும் சதாசிவத்தைக் கொல்லனும்னு நினைக்கிறப்பவும், சதாசிவத்தைக் கொன்னுட்டாதான் என்னன்னு ஆடியன்சையும் நினைக்க வச்சிருக்கறது அந்த நடிப்புதான். அதுல அந்த லாஜிக் மீறல்களைக் கொறைச்சிருக்கலாம். அப்டி இருந்திருந்தா செமயா இருந்திருக்கும்.

சரிங்க. அடுத்த பதிவுல மீண்டும் நாம சந்திப்போம். வர்ட்டா!

No comments:

Post a Comment