நூறு சாமி
அப்டின்னு ஒரு உண்மையான பெருமைக்குரிய தமிழ் சினிமாப் படம். இதுல எந்த உள்குத்தும் இல்ல. இதுதான் உண்மையும் கூட. படத்தைப் பார்த்து முடிக்கிற வரைக்கும் மனசுக்குள்ள திக்கு திக்குன்னு பல படபடப்புக்கள், அய்யோ இவனுக சினிமாவுக்குன்னு எதையும் எமோசனலா பண்ணிறக் கூடாதேன்னு. ஆனா அப்டியில்லாம உண்மையிலேயே இந்தப்படம் ஒரு எமோசனல் ரோலோகோஸ்ட்டர். நடிகர்கள்னு நிறைய பேர்த்தைப் பத்திச் சொல்லனும். அதையெல்லாம் பதிவுக்குள்ள சொல்லிக்கலாம். வாங்க அந்த எமோசனல் ரோலோகோஸ்ட்டர் அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.
கதைப்படி இதை யாரும் கதையா மட்டுமே பாத்துடக் கூடாது. அதுதான் தேவை. ஆப்வியஸ்லி இது ஒரு உண்மைச் சம்பவத்தோட பெயர்கள் கூட மாற்றம் செய்யப்படாம அப்டியப்டியே அடியொற்றி எடுக்கப்பட்ட ரீமேக் தான் இந்த நூறு சாமி சினிமா. செல்வியோட 26 வயசுல கணவனை இழந்தப்ப அவ கையில ரெண்டு பசங்க. அப்பவே அவளோட குடும்பச் சுமைய பகிர்ந்துக்க அவளோட வீட்டு ஆளுங்க கூட நிக்கல. அப்புறம் அவளே சுயமா கிடைக்கிற வேலைகளைச் செஞ்சு தன்னோட ரெண்டு பசங்களையும் படிக்க வச்சு வளக்கறாங்க. அப்பவே நான் எக்ஸ்பெக்ட் பண்ணது அந்த ரெண்டு பசங்கள்ல ஒருத்தன் தான் விஜய் ஆண்டனியா இருக்கும்னு. ஆனா இல்ல. கடைசி வரைக்கும் அந்தப் பசங்க அப்டியேதான் இருக்கங்க.
இப்ப செல்விக்கு 42 வயசு. ஆனா அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி படிச்சிட்டிருந்த காலத்துலயே ஒரு சமயம் தனக்கும் இன்னொரு வாழ்க்கையை அமைச்சிக்க எண்ணமிருக்கறதா தெரிய வர, அதுக்கு செல்வியோட பெரிய மகன் பாஸ்கர் ரொம்பவே அகைன்ஸ்ட்டா ரியாக்ட் பண்ண, அப்டியே அந்த எண்ணத்தை மறந்துட்டு வாழ்க்கை ஓட இப்ப செல்விக்கு வயசு 42. என்ன விசயம்ன்னா, இப்பத்தான் பாஸ்கருக்கு புத்தியில ஹெவிய்யா ஒரைக்கிது. அம்மா வெறும் அம்மாவா தெரியாம, நாலு சொவத்துக்குள்ள மாட்டிக்கிட்டுச் செஞ்ச வேலையையே திரும்பத் திரும்ப செஞ்சுகிட்டிருக்கற பெரிய சைஸ் எலின்னு. இப்பதான் அவன் புத்திக்கித் தெளியிது அம்மாவுக்கு ஒரு துணை வேணும்னு. அடப்பாவி சண்டாளா இதை அப்பவே ஏத்துகிட்டிருந்தாத்தான் என்னவாம் பிரச்சினை உனக்கு?
ஆனா இப்ப அம்மாவே சரின்னாலும் அதை அடுத்தவங்க எப்டி பார்ப்பாங்கன்னு தான் நினைக்கத் தோனும். பலரும் தோத்துப் போறது இங்க தான். அடுத்தவங்க என்ன நெனப்பாங்கன்ற பயம். அது பொய்யான பயமில்ல. அதுல ஆயிரம் பின்விளைவுகளும் இருக்கு. அத்தனையையும் ஒரு பிரச்சாரப் படமா இல்லாம, ஒரு வாழ்க்கையை நமக்கு ஸ்க்ரீன்ல ஓட்டிருக்காரு டைரக்ட்டர் சசி. யோவ் நீயெல்லாம் மனுசனே இல்ல தெரியுமா. சும்மா சொல்லல. 28 வருசங்கள்ல வெறும் 9 படங்களை மட்டுமே எடுத்திருக்காரு. அதுல எதையும் இது செம இது சுமார்ன்னெல்லாம் வகை பிரிக்க முடியாது. என் லைஃப்ல இப்டி ஒரு சினிமாவை வேற யாரும் எடுத்திருப்பாங்களா அப்டிங்கறது சந்தேகம் தான். நான் பார்த்தவரையில சொன்னேன். எனக்கு என் பார்வைதான் அளவுகோல். பெருமையா சொல்லிக்கலாம் சசி படத்துக்குப் போறேன்னு, அவ்ளோ நல்ல சினிமாக்களைக் கொடுக்கறவர். அதுல டிஷ்யூம் மட்டும் நான் இப்பவரைக்கும் பாத்ததில்ல.
அடுத்ததா செல்வியா நடிச்ச ஸ்வாஸிகா. பல வருசமா இந்தக் கதையை எழுதிட்டு எடுக்காம அப்டியே செல்வியா யாரை நடிக்க வைக்கலாம்னு கூட தேடாம அமைதியா விட்டுட்டாருன்னு ஒரு இண்டர்வ்யூல விஜய் ஆண்டனி சொன்னதா ஞாபகம். இப்ப ஸ்வாஸிகாவைத் தவிர யாரையும் செல்வியா யோசிக்கக் கூட முடியாது. நெய்ல்ட் இட். வாழ்ந்திருக்காங்கன்னு வார்த்தை அலங்காரமா சொல்லுவாங்கல்ல. அதை நெஜமாவே இதுல செஞ்சு காட்டிருக்காங்க. அந்த சீலிங் ஃபேனைத் தனக்குப் பேச்சுத் துணையா பாவிச்சுகிட்டுப் பேசற அந்த சீன்ஸ் எல்லாம் கண்ல தண்ணி வந்தது எனக்கு ஏன்னு தெரியல. வீடு வரை உறவுன்னு சொல்லுவாங்க. ஆனா இந்த உறவெல்லாம் எதுக்காக நிக்கும் எதுவரைக்கும் போகும்னு நமக்கு உரைக்கிற மாதிரி வந்த காட்சிகள் எல்லாம் பாக்கவே பகீர்னு இருக்கு. ஆனா இதான் நிஜம்ல!
அடுத்து பெரிய மகன் பாஸ்கரா நடிச்சிருக்கற அஜய் திஷான் அண்ட் ரெண்டாவது மகனா நடிச்சிருக்கற் சக்தி. இதுல அஜய் திஷான் மார்கன் படத்துல நடிச்சவர். ஆனா சக்தி யார்னு சொல்லாமயே எல்லாருக்கும் தெரியும். காமெடிதான் வரல. பரவால்ல செமயா நடிக்க வருதே அதுவே போதும். ஆமாங்க செகண்ட் சீசன்ல குக்கு வித் கோமாளியில கோமாளியா வந்த அதே போர்ச்சுக்கல் பொம்பள போலிஸ் சக்தியே தான். அதான் செல்வியோட பசங்களே தன்னோட அம்மாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கத் தயாராகிட்டாங்களே அப்றமும் என்னன்னு நாம அப்டி லேசா நினைக்க முடியாது. அதுக்கு எத்தனைத் தடைகள் எந்தெந்த ரூபத்துல வந்து நிக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. அதுக்கு இந்த ரெண்டு பேரும் கொடுத்திருக்கற உழைப்புன்னு தான் சொல்லனும். ஏன்னா நடிப்புன்னு சொல்ல முடியாது. அதைப் படம் பார்த்தா புரியும்.
இதுபோக, ஜென்சன் திவாகர், பக்ஸ் பகவதி, தமிழ் பிக்பாஸ் அஞ்சாவது சீசன்ல வந்த தாமரை, கோடாங்கி வடிவேல், முனிஸ்காந்த், அருள்தாஸ், லிஜிமோல் ஜோஸ், வினோதினின்னு நிறைய பேர் நடிச்சிருந்தாலும் தனியா குறிப்பிட்டு சொல்லக் கடவது பாலாஜி சக்திவேல் அண்ட் கருணாஸ் கதாபாத்திரங்களைத் தான். ஏன்னா முன்னாடி சொன்ன பெயர்கள் எல்லாருக்கும் ஸ்க்ரீன் ஸ்பேஸ் அவ்வளவுதான். ஆனா இந்த ரெண்டு பேரும் மெரட்டிருக்காங்கன்னு தான் சொல்லனும். அதுக்காக இவங்க எல்லாம் மட்டும்தான்னு இல்ல. இதுல பலரோட பேரே தெரியாது. அதனால அவங்களைப் பத்திக் குறிப்பிட முடியல. அதுல எதைப் பத்தியும் நான் குறிப்பிட்டுச் சொல்றதை விட தியேட்டர்ல பாருங்க புரியும். தனித்தனியா ஒவ்வொரு சீன் பத்தியும் சிலாகிக்கலாம். ஆனா அது இல்ல இந்தப் பதிவு. ரொம்ப நாள் கழிச்சு ஒரு சினிமா பார்த்த திருப்தியோட இந்தப் பதிவ முடிச்சுக்கறேன்.
நாம அடுத்த பதிவுல சந்திப்போம் நண்பர்களே... வர்ட்டா!
No comments:
Post a Comment